பரம
குயவனே
என்னை
வனையுமே
பரம குயவனே என்னை வனையுமே
உம் சித்தம் போல் என்னை வனையுமே (2)
உமக்காக என்னை வனையுமே
களிமண்ணான என்னை வனைந்திடுமே (2)
உம்கரத்தாலே மண்ணை பிசைந்து
மனிதனை உருவாக்கினீர்
எந்தனையும் தொட்டு -உம்
சாயலாக வனையும்
உம்மைப்போல மாற்றிடுமே –என்னை (2)
உமக்குகந்ததாய் உடைத்து என்னை
உம்முடைமை ஆக்கிடுமே
விருப்பம்போல என்னை
திருத்தும் உந்தன் கரத்தால்
அருமையாக வனைந்திடுமே - உமக்கு
உமது சித்தத்தின் மையத்திலென்னை
வைத்து என்றும் வழிநடத்திடும்
உந்தன் சித்தம் செய்ய
என்னை தத்தம் செய்தேன்
முழுமையாக அர்ப்பணம் செய்தேன்-என்னை